சத்தீஸ்கர் மாநிலத்தில், ‘மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் திருமணமான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, அம்மாநில அரசு செலுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் நடிகை சன்னி லியோன் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாதம் ரூ.1000 அனுப்பப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விசாரணையில், அம்மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர், சன்னி லியோன் பெயரில் கணக்கை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், ‘மஹ்தாரி வந்தன் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் திருமணமான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, அம்மாநில அரசு செலுத்தி வருகிறது.