தும்பைப் பூ சிலவற்றையும், வேப்பங் குச்சியை
பூப்போலச் சீவிக்கொஞ்சம் சேர்த்தும் ஒரு பொட்டல
மாகக் கட்டி ஊறப்போட்ட பிள்ளைப்பாலைச் சொட்
டுச் சொட்டாகக் கொடுக்க, தொண்டையிற் கட்டியுள்ள
கவக்கட்டு, நீங்கிக் குணமாகும். கவம் விலக இதைவிடச்
சிறந்த மருந்து வேறில்லை.
2. வெள்ளைக் கரணம் விதையைக் கொண்டு
வந்து ஒரு விதையிற் பாதியை மட்டும் எடுத்து வெந்நீர்
விட்டுச் சந்தனக்கல்லில் இழைத்துக் கொடுக்க, குழந்தை
களின் கோழை, கவக்கட்டு, மலக்கட்டு முதலியவை
நீங்கும். அன்று தாய்க்குப் புளி யாகாது.