விஷ்ணுகாந்திச் செடியை அப்படியே அரைத்துப்
பசும் பாலில் கலந்து கொடுத்தால், க்யரோகம் விலகும்.
காசம் இருமல் தீரவும், கண்ணொளி உண்டாகவும், இதே
மருந்துதான். காலை வேளைகளில்: மட்டும் அருந்தவும்.
ஆஸ்துமா என்றகாச நோய்க்கு, வெள்ளை எருக்கம்
பூவிலுள்ள மூடு இதழ்களை விலக்க, உள்ளே தேர்
போன்ற நரம்பு ஒன்றை மட்டும் கிள்ளி எடுத்து, ஒரு
நரம்பும் ஒரு கிராம்பும் ஓரு வெற்றிலையில் வைத்துக்
கொடுத்து மென்று தின்னச் செய்யுங்கள்.
தினந்தோறும் காலையில் ஒரு வேளை. இம் மருந்து தொடக்க
நோயுள் வர்களுக்கு முழுக் குணத்தைத் தருகிறது. நாள்
மருந்து போதுமானது. அதிகமாகக் காசநோயால்
கஷ்டப்படுகிறவர்கள். அப்போதைக்கப்போது சாந்தி
யாக, இம்மருந்தை.எளிகில் கையாளலாம், ஒரேவேளை
மருந்து, 5 நிமிடத்தில் குணங்காணலாம்.
கடல் நுரையை இரண்டு விராட்டிகளுக்கு இடையில்
வைத்துத் தீ வைத்துவிட்டால் பஸ்பமாகி விடும். அதை
இரண்டு விரல்களால். எடுத்துத் தேனிற் குழைத்துக்
கொடுத்தால், க்ஷயம், காசம், இழுப்பு. முதலியன விலகும்.
மூன்றே வேளை மருந்து போதும், புகை பிடித்தல், புளி,
காரம் கூடாது.