Warts are abnormally small growths (மருக்கள் சிகிச்சை என்ன? ) that can appear anywhere on the body, but are most commonly found on the face, hands, and feet. These are caused by an infection caused by a virus called human papillomavirus (HPV), which enters the body through cracks and abrasions on the skin.
மருக்கள் என்பவை, உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றக் கூடிய, அசாதாரணமான சிறிய வளர்ச்சிகள் ஆகும், ஆனால், பொதுவாக அவை முகம், கைகள் மற்றும் பாதங்களில் காணப்படுகின்றன. இவை, ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் (எச்.பி.வி) எனப்படும், தோலின் மேலேயுள்ள வெடிப்புகள் மற்றும் சிராய்ப்புகள் மூலம் உடலுக்குள் நுழையும் வைரஸ் ஏற்படுத்தும் நோய்த்தொற்றின் காரணமாக வருகிறது.
மருக்கள் மிகவும் தொற்றக்கூடியவை மற்றும் தொடுதல் மூலம் விரைவாகப் பரவுகின்றன. இவை மாறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகளில் தோன்றுகின்றன, மேலும் அவற்றின் தோற்றம் மற்றும் தோன்றுகின்ற இடத்தைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவான மருக்கள், பாத மருக்கள், தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள் மற்றும் பலவண்ண மருக்கள் ஆகியன மருக்களின் முக்கிய வகைகள் ஆகும்.
மருக்களை குணப்படுத்த இயலாது, எனவே, சிகிச்சை கிரியோதெரபி அல்லது எலெக்ட்ரோதெரபி மூலம் அந்த மருவை அழிப்பது அல்லது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைத் தூண்டி விட்டு, அந்த வைரஸை எதிர்த்துப் போராட எதிர்மங்களை உற்பத்தி செய்ய வைப்பதில் கவனம் செலுத்துகிறது. இது,சாலிசிலிக் அமிலம் அல்லது நாள நாடா அல்லது மற்ற மருத்துவங்களின் உதவியோடு செய்யப்படுகிறது.
மருக்கள் அழிக்கப்பட்டால், பின்பு எப்போதும் திரும்ப வரும் வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலான மருக்கள், உடல் அந்த வைரஸுக்கு எதிராக எதிர்மங்களை உற்பத்தி செய்வதால், ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் தாமாகவே மறைந்து விடும். ஆரோக்கியமான மக்களுக்கு, மருக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதில்லை. மருக்கள் குணப்படுத்த கடினமானவைகளாக இருந்தாலும், பொதுவாக அவை எந்த ஒரு அச்சுறுத்தல்களையும் தருவதில்லை.
• மருக்கள் சிகிச்சை
மருக்கள் யாருக்கு வேண்டுமானலும் வரக் கூடும், ஆனால் மிகவும் பொதுவாக பதின்ம வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு வருகிறது. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரில், கிட்டத்தட்ட 33% பேர் ஒரு நேரம் இல்லை இன்னொரு நேரத்தில் பருக்களைக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மருக்கள் வலியற்றவை மற்றும் அவை தாமாகவே போய் விட முனைகின்றன. அனைத்து பெரியவர்களில் 3 முதல் 5% பேருக்கே மருக்கள் வருகின்றன. பெரும்பாலான நபர்கள், பருக்கள் தாமாகவே மறையாத பொழுது, அல்லது விரும்பத்தகாததாக அல்லது பார்க்க இயலாத மாதிரி இருக்கும் பொழுது சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மருக்கள் என்பவை, தோலின் வெளிப்புற பரப்பின் மேல் ஒரு சிறிய வளர்ச்சிகள் உருவாகும், மிகவும் பரவலான வைரஸ் நோய்த்தொற்று பிரச்சினையாகும். ஹியூமன் பாப்பில்லோ வைரஸ் (எச்.பி.வி) எனப்படும் ஒரு பொதுவான வைரஸால் ஏற்படுகிறது. மருக்கள் வேறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகளில் உருவாகின்றன.
அவை மிகவும் சிறியதாக அல்லது பெரிதாக, வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறம் போன்ற வேறுபட்ட நிறங்களில் உங்கள் தோலில் வேறுபடக் கூடும். அவை சொரசொரப்பாக அல்லது மென்மையாக, தட்டையாக அல்லது புடைத்து அல்லது நீளமாக மற்றும் மெலிவாக இருக்கக் கூடும். பொதுவாக, மருக்கள் கைகள், பாதங்கள் மற்றும் முகத்தில் தோன்றுகின்றன என்றாலும் உடலின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றக் கூடும்.
- மருக்கள் அறிகுறிகள் என்ன – Symptoms of Warts in Tamil
மருக்களின் குணநலன் சார்ந்த அறிகுறிகள், உடலின் மாறுபட்ட பகுதிகளில் ஏற்படும், சிறிய தோல் வளர்ச்சிகள் தோன்றுவதாகும். மருக்கள் தனியாகத் தோன்றவோ அல்லது கூட்டங்களாக அல்லது ஒரு பரந்த பகுதி முழுவதும் கொத்தாகவோ தோன்றலாம்.
சில மருக்கள், அவை ஏற்பட்ட இடத்தில் அரிப்பு, இறுக்கம் மற்றும் ஒரு அழுத்த உணர்வை ஏற்படுத்தலாம். சில மருக்கள், தங்களுக்குள் சிறிய கறுப்புப் புள்ளிகளைக் (விதைகள் எனவும் அழைக்கப்படும்) கொண்டிருக்கின்றன. பொதுவாக மருக்கள் வலியற்றவை மற்றும் எந்த ஒரு அசௌகரியத்தையும் ஏற்படுத்துவதில்லை. உள்ளங்கால்களில் உருவாகும் மருக்கள், ஒருவேளை அவை உட்புறமாக வளர்ந்திருந்தால், நடக்கும் போது வலி ஏற்படுத்தக் கூடும்.
பெரும்பாலான மருக்களுக்கு எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை, அவை தாமாகவே போய் விட முனைகின்றன. ஒரு காலகட்டத்திற்கு மேல், உடல் அவற்றுக்கு எதிராக எதிர்மங்களை உருவாக்க முனைகின்றன, அதனால் அவை மறைகின்றன. இருப்பினும், சில நேரங்களில், இதற்கு சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் வரை கூட எடுத்துக் கொள்ளலாம். மருக்கள், அழகற்றதாகத் தோன்றி ஒருவரின் சுயமரியாதையை கடுமையாக பாதிக்கும் போது அல்லது அவை வலிமிகுந்தவையாக இருக்கும் போது, சிகிச்சை முயற்சிக்கப்படுகிறது.
ஏதேனும் மறைந்திருக்கும் காரணங்கள் இருந்தால், பரிசோதனை மூலம் கண்டறிந்து, அவற்றைக் களைய ஒரு தோல் மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது.
மருக்களுக்கு சிகிச்சையளிக்க, பல்வேறு வீட்டு மருத்துவங்கள் உள்ளன. அவற்றுள் அடங்கியவை:
• சாலிசிலிக் அமிலம்
இது, மருக்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் மிகவும் பொதுவான வீட்டு வைத்தியமாகும். பெரும்பாலான நாடுகளில், சாலிசிலிக் அமிலம் மருந்துக்கடைகளில் கிடைக்கிறது, மற்றும், பலவித அடர்த்திகளில் இருக்கிறது. பெரும்பாலான களிம்புகள் மற்றும் ஜெல்கள், எப்படி பயன்படுத்த வேண்டுமென்ற விரிவான வழிமுறைகளைக் கொண்டிருக்கின்றன. சாலிசிலிக் அமிலம் தோல் உரிதல் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக் கூடும் என்பதால், நீங்கள் அந்த வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றுவது அறிவுறுத்தப்படுகிறது.
ஏதேனும் முன்னேற்றம் காணப்படுவதற்கு முன்பு வரை, பல வாரங்களுக்கு நீங்கள் அந்த மருந்தை, ஒரு நாளில் பல முறை தடவ வேண்டிய அவசியம் இருக்கலாம். மருந்தைத் தடவுவதற்கு முன்பு, மருக்களின் மேல் அடுக்கை நீக்குவதற்கு மென்மையாகத் தேய்ப்பது, மருந்தின் செயல்பாட்டை வீரியமாக்க உதவுகிறது. இருப்பினும், வைரஸ் தோலின் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்க, ஒருவர் உயர்ந்த சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பேணுவது அவசியமாகிறது. சாலிசிலிக் அமிலம் எரிச்சலை ஏற்படுத்தி, அதனால் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பைத் தூண்டி, அந்த வைரஸை அழிக்க எதிர்மங்களை உற்பத்தி செய்ய வைக்கும் உத்தியின் படி வேலை செய்கிறது. இந்த வைரஸை நேரடியாக அழிப்பது சாத்தியமற்றது.
• நாள நாடா
சில மருத்துவர்கள், மருவின் மீது நாள நாடாவை ஒட்டுவதைப் பரிந்துரைக்கிறார்கள். இந்த நாடா சில நாட்களில் உரிந்து விடும். நோய்த்தொற்று ஏற்பட்ட தோலின் மேல் அடுக்குகளை உரித்து எடுப்பது, வைரஸோடு போராட நோய் எதிர்ப்பு அமைப்பை தூண்டுகிறது என நம்பப்படுகிறது.
முதலில், தோலை மிருதுவாக்க மருவை வெதுவெதுப்பான நீரில் கழுவவும், பிறகு, உபயோகித்த பின் தூக்கி எறியக்கூடிய ஒரு எமரி அட்டையினால் மருவைத் தேய்க்கவும். நாள நாடாவில் ஒரு சிறிய துண்டை அந்தப் பகுதியில் ஒட்டவும். மரு மறையும் வரையில், 5-6 நாட்களுக்கு ஒருமுறை நாடாவினை மாற்றிக் கொண்டே இருக்கவும்.
உங்கள் மருக்கள் எண்ணிக்கையில் அதிகரித்தாலோ, ஏதோ வகையில் வலி அல்லது அரிப்பை ஏற்படுத்தினாலோ, உங்கள் தோல் வளர்ச்சியின் இனம் பற்றி உங்களுக்கு உறுதி இல்லாவிட்டாலோ, ஒரு தோல் மருத்துவரை உடனடியாகப் பார்க்க வேண்டியது அத்தியாவசியமானது.
• கிரியோதெரபி
தோல் மருத்துவர், மருவின் வெளிப்புற கடினமான அணுக்களை, நீர்ம நைட்ரஜன் கொண்டு உறைய வைப்பதன் மூலம் அழித்து, தோலை குணமாக அனுமதிக்கும் கிரியோதெரபி எனப்படும் ஒரு செயல்முறையை மேற்கொள்ளக் கூடும். நீர்ம நைட்ரஜனின் குறைந்த வெப்பநிலை காரணமாக, தோல் சிவப்பாக அல்லது வீக்கமாக மாறக் கூடும். மருக்களின் எண்ணிக்கை மற்றும் அளவைப் பொறுத்து, திரும்பத் திரும்ப செய்யப்பட வேண்டி வரலாம். பொதுவாக, தோல் குணமாக வாய்ப்பளிப்பதற்காக, ஒவ்வொரு முறைகளுக்கும் இடையே 7 முதல் 10 நாட்கள் வரை இடைவெளி விடப்படுகிறது. சிகிச்சைக்கு முன்னால், உங்கள் தோல் மருத்துவர் ஒரு மரப்பு களிம்பைத் தடவக் கூடும்.
• கேந்தரைடின்
உங்கள் தோல் மருத்துவர், மருவைக் குணப்படுத்தும் மருந்தை, மருவின் மீது பூசுவது அல்லது தடவுவது மூலம், மருவுக்கு சிகிச்சையளிப்பார். பிறகு இறந்த மரு, ஒரு வாரம் அல்லது சில நாட்களுக்குப் பிறகு நீக்கப்படும்.
• மின் அறுவை சிகிச்சை அல்லது சுரண்டல் மருத்துவம்
மின் அறுவை சிகிச்சை, மருக்களை எரிப்பதோடு தொடர்புடையது மற்றும் பொதுவான மருக்கள், மெலிந்த மருக்கள் மற்றும் பாத மருக்களுக்கு பயன்மிக்கதாக இருக்கிறது. சுரண்டல் மருத்துவம், ஒரு கூர்மையான கத்தியால் மருவை வெட்டி அல்லது சுரண்டி எடுப்பதோடு தொடர்புடையது. பொதுவாக, இந்த இரண்டு நடைமுறைகளும் இணைந்தே செய்யப்படுகின்றன, மேலும் மரு முதலில் எரிக்கப்படலாம், அதன் பின் சுரண்டி எடுக்கப்படலாம் அல்லது இதுவே தலைகீழாக மாறி செய்யப்படலாம்.
• வெட்டுதல்
இது, தோல் பரப்பிலிருந்து மருவை வெட்டி எடுத்து நீக்குவதோடு தொடர்புடையது.
மருக்களுக்கான சிகிச்சை பலன் மிக்கவை, ஆனால் இது, மருக்கள் திரும்ப வராது என்பதைக் குறிக்கவில்லை, குறிப்பாக வைரஸ் இன்னமும் தோலில் இருக்கும் போது அல்லது அது மறுபடி நோய்த்தொற்றை ஏற்படுத்தினால். மருக்கள் திரும்ப உருவாகும். வைரஸுக்கு எதிராக, உங்கள் உடல் உற்பத்தி செய்யும் எதிர்மங்களைத் தவிர, அவற்றுக்கு நிரந்தர சிகிச்சை எதுவும் இல்லை.
Know more:
How to know symptoms of Nerve Disorder?
புற நரம்பு கோளாறு என்றால் என்ன?
How to know cure Neurological Disorders?
நரம்பியல் கோளாறுகளை குணப்படுத்துவது எப்படி?
How to know Cure for Urinary disorders?
சிறுநீர் கோளாறுகளுக்கான சிகிச்சையை எப்படி அறிவது?