அத்திப்பழம்

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

நம்மில் பலருக்கு இந்த அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால் பலர் இந்த அத்திப்பழத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள். அப்படியே பார்த்திருந்தாலும் இதனை எவ்வாறு சாப்பிடுவது என்று தெரியாது. இதற்க்கு காரணம் இதனுடைய தோற்றம் தான். இதனுடைய சுவை எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பாரும் இதனை சாப்பிடாமல்  இருப்பார்கள்.

ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதுதினமும் ஒரு உளர் அத்திப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 
இயற்கை முறை மருத்துவம்:

நம்முடைய உடலுக்கு இயற்கை முறை மருத்துவமே சிறந்ததாக கருதப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள் வீட்டிலே தான் . மருத்துவத்தை வைத்திருத்தனர். நம்முடைய உணவு முறையை சரி செய்தாலே நம்முடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு எவ்வாறு நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பதை பற்றி  நம்மில் பலருக்கு எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு நினைப்பவர்கள் இந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். இந்த உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவு. எனவே குறைந்த அளவே கொழுப்பை பெற முடியும். இதனால் உடல் எடை குறையும்.

அத்திப்பழம்

செரிமான பிரச்னைகள்:

உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தினமும் 3 அல்லது 4 அத்திப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு  தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கின்றது.இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். மேலும் இதனால் பசியின்மை  பிரச்சனையும் நீங்கும்.

வைட்டமின் சத்து:

அத்திப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் அதிகம் உள்ளது. மேலும் மற்ற பழங்களை இந்த  அத்திபழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. இதனால் இந்த அத்திப்பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.மேலும் நம் உடலுக்கு ஆற்றலும் தரும்.

இரத்த அழுத்தம்:

நம்முடைய உடலில் சேர்த்து கொள்ளவும் உப்பின் அளவு அதிகமா இருந்தால் அது சோடியத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் நம்முடைய உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறிக்கியது, எனவே நமக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு  அத்திப்பழம் நல்ல தீர்வாக இருக்கும். தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் அதிக அளவு பொட்டாசியம்  இருப்பதால் இந்த இரத்த அழுத்தம் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.

அத்திப்பழம்

புற்றுநோயை தடுக்கும்:

அத்தி பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட்கள் இருப்பதால் அது புற்றுநோய்க்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கும்நம்முடைய உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை இது தடுத்து நம்மை பாதுகாக்கிறதுஎனவே இனிமேல் மார்க்கெட் சென்றால் இந்த அத்திப்பழத்தை மறக்காமல் வாங்கி தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.

இதய நோய் வராது:

இந்த அத்தி பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்கிறது. இதனால் இதயத்திற்கு சீராக இரத்தம் செல்கிறது.எனவே நமக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம்.இனிமேல் தினமும் ஒன்று இல்ல இரண்டு அத்தி பலன்களை சாப்பிடுவது நம் இதயத்திற்கு மிகவும் நல்லது.

எலும்புகளை வலிமையாக்கும்:

தினமும் அத்திப்பழத்தை சாப்பிடுவதால் அது நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது. ஒரு அத்தி பழத்தில் 3% கால்சியம் உள்ளது. இது நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தீயன கால்சியத்தின் அளவாகும். எனவே இது எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.

மேலும் சில நன்மைகள்:

1.         அத்தி பழத்தை தினமும் சாப்பிடுவத்தல் இரத்தஓட்டம் சீராகும்.

2.         உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம்எனவே இதனை நீரிழிவு நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்(dry fig fruit benefits in tamil). மருத்துவரிடம் ஆலோசனை கேட்டல் அவர் ஒரு நாளைக்கு எத்தனை அத்திப்பழம் சாப்பிடலாம் என கூறுவார்.

3.         அத்தி பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

More From Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *